சாமிலி ராஜ்குமார் அவர்கள் வளைகாப்பில் பல்வேறு புதுமைகள். அவர்கள் அலங்காரம் செய்ய துவங்கும் போது இருந்தே படக்காட்சிகள் எடுத்துள்ளார்கள். முக அலங்காரம் + சினை அலங்காரம் என இரண்டு விதமாக. மண்டபத்தில் சீர் தட்டுகளில் உணவு பொருட்களுக்கு பதிலாக முற்றிலும் குழந்தைகள் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் என 23 தட்டுகள் வைத்துள்ளதாக அவரே கூறுகிறார். மேடையில் கணவன் மனைவி மற்றும் குழந்தையுடன் நிகழ்ச்சி துவங்கி நடைபெறுகிறது. அந்த பெண் குழந்தையின் ஆசையின் பேரிலேயே அனைத்து ஏற்பாடுகளும் வண்ணங்கள் வரையிலும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளதாக விளக்குகிறார். மிட்டாய்களும் நிறைய உள்ளது. தவிரவும் தனது சினை அலங்காரம் செய்தவர், மாலை செய்து கொடுத்த நிறுவனம், வண்ண மயமான ஜாக்கெட் தைத்தவர்கள் என இந்த விழாவிற்கு சம்பந்த பட்ட அனைவரையும் அறிமுகப் படுத்துகிறார்.