பச்சை மயில் வாகனனே

home Forums ஆயகலைகள் 64 பக்தி அரங்கு பச்சை மயில் வாகனனே

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #116
    Avatar photoசிவா
    Participant

      பச்சை மயில் வாகனனே
      பாடியவர்கள் : சாய்லஷ்மி-சாய்ஷ்ரேயா

      இந்த பாடலுக்கான வரிகளையும் கீழேயே கொடுக்க பட்டுள்ளது…

      பச்சை மயில் வாகனனே – சிவ
      பால சுப்ரமணியனே வா
      இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
      எள்ளளவும் பயமில்லையே

      கொச்சை மொழியானாலும் – உன்னை
      கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
      சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்
      சாந்தம் நிறைந்ததப்பா
      பச்சை மயில் வாகனனே – சிவ
      பால சுப்ரமணியனே வா
      இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
      எள்ளளவும் பயமில்லையே

      நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்கு
      நேர்மையெனும் தீபம் வைத்து
      செஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகா
      சேவல் கொடி மயில் வீரா
      பச்சை மயில் வாகனனே – சிவ
      பால சுப்ரமணியனே வா
      இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
      எள்ளளவும் பயமில்லையே

      வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்
      தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍ நீ
      மெல்ல மெல்ல புகுந்து விட்டாய் – எந்தன்
      கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
      பச்சை மயில் வாகனனே – சிவ
      பால சுப்ரமணியனே வா
      இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
      எள்ளளவும் பயமில்லையே

      ஆறுபடை வீடுடையவா
      எனக்கு ஆறுதலை தரும் தேவா
      நீ ஏறுமயில் ஏறி வருவாய் – அப்பா
      எங்கும் நிறைந்தவனே
      நீ ஏறுமயில் ஏறி வருவாய் – முருகா
      எங்கும் நிறைந்தவனே
      பச்சை மயில் வாகனனே – சிவ
      பால சுப்ரமணியனே வா
      இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
      எள்ளளவும் பயமில்லையே

      அலைகடல் ஓரத்திலே – என்
      அன்பான சண்முகனே – நீ
      அலையா மனம் தந்தாய் – உனக்கு
      அனந்த கோடி நமஸ்காரம்.
      நீ அலையா மனம் தந்தாய்
      உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
      பச்சை மயில் வாகனனே – சிவ
      பால சுப்ரமணியனே வா
      இங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்
      எள்ளளவும் பயமில்லையே

    Viewing 1 post (of 1 total)
    • You must be logged in to reply to this topic.
    error: Content is protected !!
    Scroll to Top